புதன், 30 அக்டோபர், 2013

இன்றைய நாள்

1 .உலகம் முழுமையிலும் மனிதநேயமும் சமாதானமும் மலர, செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவரும், ஜெனீவா ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்தவருமான, ஜீன் ஹென்றி டுணான்ட் அவர்களின் நினைவுநாள் இன்று.

2. இயற்கையை தன் இறக்கைகளால் காத்துவரும் பல்லுயிர்க் காரணிகளான பறவைகள் நாள் இன்று. 

3. அந்நிய நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தில்  அடுத்த வேளை உணவுக்கு வழியின்றித் தவிக்கும் 63 விழுக்காடு மக்களுக்கு “அடுத்தவர்க்காகக் கடன் வாங்கியாவது கொண்டாடு தீபாவளியை... அதற்குப்பிறகு  ஆண்டு முழுவதும் திண்டாடு ... எனப் புளிச்சேப்ப ஆதிக்க வர்க்கம் பசிஏப்பக் காரர்களுக்கு உபதேசம்  செய்யும் “உலகச் சிக்கன நாள் ” இன்று. 
அடுத்த வீட்டுக்காரன் அவல் இடித்தால்... அவனுக்குப் போட்டியாகப் புளியங்கொட்டையையாவது  இடிக்க வேண்டுமெனப் புலியைப் பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளும் புனைகளாய் ஆகிப்போனோமே. என்று தணியும் ....?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக