வியாழன், 23 பிப்ரவரி, 2012

மணிமன்றம்- 2012 பிப்பிரவரி

                மணிமன்றத்தின் 2012 பிப்பிரவரித் திங்கள் கூட்டம் 04.02.2012 மாலை 6.30 மணியளவில் வழக்கமான இடத்தில் நடைபெற்றது.
               மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் அவர்கள் வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
              1. சிங்கப்புர் சென்று இலக்கியப் பணி செய்து திரும்பிய மன்ற உறுப்பினர் திரு வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது.
             2. பதவி உயர்வு பெற்ற மன்ற உறுப்பினர் திரு ஆ.செல்வராசு அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
             3. மன்ற உறுப்பினர் செல்வி அ.மாது அவர்களின் திருமணத்திற்கு மன்றத்தின் சார்பாக வாழ்த்தும் அன்பளிப்பும் செய்ய முடிவுசெய்யப் பட்டது.
            4. 2012 ஆண்டு முதல் மன்ற உறுப்பினர் ஆண்டு சந்தா 100 (நூறு)  என தீர்மானிக்கப் பட்டது. அதனை மார்ச் 2012ல் அனைத்து உறுப்பினர்களும் பொருளாளர் வசம் செலுத்தவும் அறிவிக்கப் பட்டது.
            5. தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்குத் தகுந்த எழுத்து மூலமான தவிர்ப்புப் பெறாத உறுப்பினர்களுக்கு முன்னறிவிப்பு செய்து விளக்கம் வராவிடில் நீக்கம் செய்வது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
           6. அண்மையில் கடலூர் மாவட்டத்தைத் தாக்கிச் சீரழித்த தானே புயலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கப் பட்டது.
           7. மன்றத் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் அவர்களுக்கு அநுராகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
          மன்றத் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் அவர்கள் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக