திங்கள், 26 செப்டம்பர், 2011

செம்மல்கள் பிறந்த செப்தெம்பர் திங்களில்..

          திருவள்ளுவர் ஆண்டு 2042 கன்னித் திங்கள் 9ஆம் நாள் திங்கள் கிழமை மணிமன்றத்தின் திங்கள் கூட்டம், மன்றத் தலைவர் திரு பொன்.பால சுப்பிர மணியன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. செப்தெம்பர்ச் செம்மல்களின் சிறப்புகள் போற்றப்பட்டன. செப்-5ல் பிறந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நாடகத்தந்தை சங்கரதாசு அடிகள், மேனாள் குடியரசுத் தலைவர்  முனைவர் இராதாகிருட்டினன்,தமிழறிஞர் சாலை இளதிரையன் (செப் -6 )முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்( செப்-10) பேரறிஞர் சி.ந.அண்ணாத்துரை (செப்-15) அரசன் சண்முகனார், பகுத்தறிவுப் பகலவன் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்  ஈ.வே.ரா (செப்-17) ,உடுமலை நாராயணகவி ( செப்-25 ) பாவலர் பெரியசாமி தூரன், சி.பா.ஆதித்தனார்   (செப்-27 )  மாவீரன் பகத்சிங் ( செப்- 28 ) திருக்குறள் முனுசாமி ( செப்-29 ) ஆகியோரது பிறந்தநாள்களும், இத்திங்களின் மறைந்த பேரா.இலக்குவனார் (செப்-3) அன்னை தெரசா ( செப்-5) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ( செப்-11 ) தமிழ்க்கடல் மறைமலையடிகள் ( செப்-15 )  தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம் ( செப்-17) இரட்டைமலை சீனிவாசன் (செப்-18) புலவர் குழந்தை ( செப்-24) தமிழவேள் பி.டி.இராசன் ( செப்-25 ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ( செப்-26 ) ஆகியோரின் நினைவுகளும் போற்றப்பட்டன. 
              ஊழல்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்துகளை துண்டறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பிட வேண்டிய இன்றியமையாமை பற்றியும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன. மன்றத்தின் துணைச் செயலாளர் திருமதி .அரங்க.நீலா அவர்களின் ” கற்றது சிறையளவு” ” சக்கரவாகப் பறவைகள்”"Education within Iron bars" ஆகிய மூன்று நூல்கள்  25.09.2011 அன்று ஆலங்குடியில் அறிவொளி நாயகி திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்களால் வெளியிடப் பட்டதற்கும், மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் செப் -5ல் புதுக்கோட்டை கவிராசன் இலக்கியப் பேரவையால் நல்லாசிரியர் விருது பெற்றமையையும் மன்றம் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக