வியாழன், 26 மே, 2011

kodai ariviyal thiruvizha-A.V.Kovil

21 .05 .2011 அன்று ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய கிளையின் சார்பாக கோடை அறிவியல் திருவிழா நடைபெற்றது .ஆவுடையார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சுப்பையா அவர்கள் விழாவினை தொடங்கி வைத்தார் .100 மாணவர்கள் கலந்து கொண்டனர் .ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு சுரேஷ்ராஜன் ,செல்வராசன் ,அய்யனார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்துணைத்தலைவர் திரு பொன்.கருப்பையா எளிய அறிவியல் ஆய்வுகள் ,அறிவியல் அற்புதங்களை விளக்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தார் .கோகர்நேசன் காகித மடிப்பு ,விளையாட்டுகள் ஆகியவற்றில் பயிற்சியளித்தார் .மாநில செயற்குழு உறுப்பினர் திரு கோவிந்தசாமி ,மாவட்ட செயலாளர் திரு சேதுராமன் ,துணை செயலாளர் திரு  ஜெயபாலன் ஆகியோர் குளம் ,மரம் பற்றிய ஆய்வுகளில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக