செவ்வாய், 31 மே, 2011

ிபான் விழா ஆண்டை நோக்கி.....

தோற்றம்
             1964 ஆம் ஆண்டில் சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மணிமன்றம் கடந்த 46 ஆண்டுகளாக பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை ஆற்றி வந்துள்ளது.
நோக்கம்
            அரசியல், மத,இன,சாதி சார்பற்ற நிலையில்  பின்தங்கிய கிராமப்புற மாணவர், சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது..

 அமைப்பு முறை
            நிறுவுனரும் நிருவாகியும்  புலவர் பொன்.கருப்பையா.   
உறுப்பினர்்
            சமூக அக்கறையுள்ள வர்கள். வயது வரம்பு இல்லை.
பொறுப்பாளர்கள் ்
            ஆண்டு தோறும் தேர்தல் முறையில் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு துணைச் செயலாளர்கள், ஐந்து உறுப்பினர்களுக்கு ஒரு செயற்குழு உறுப்பினர். ஒரு தணிக்கையாளர்.
            தொடக்கத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இம்மன்றத்தில்  இதுவரை 312 பேர் அங்கம் வகித்துள்ளனர். பல்வேறு துறைகளில் பணியாற்றுபவரகள் தங்கள் பணிமாறுதல், ஒழுங்கு நடவடிக்கை, இறப்பு காரணமாக நீங்கியவர்கள் போக 2011ல் 22 உறுப்பினர்களோடு இயங்கி வருகின்றது.

செயல் முறை 
             திங்கள் தோறும் மன்ற உறுப்பினர்கள் கூடி அவ்வக்கால சமூகப் பிரச்சனைகள் பற்றி பேச்சு, கவிதை, பாட்டு, விவாதம், பட்டிமன்றம் மூலம் விவாதித்து, தீர்வுக்கான வழிமுறைகளில் செயலாற்றுவது.
   ஒவ்வொரு ஆண்டும் மே-சூலைத் திங்கள்களில் மன்ற ஆண்டுவிழாவினை  பொது அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்துவது. ஆண்டுவிழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மருத்துவர்கள்.சிறந்த கல்வியாளர்கள்.சமூகசேவையாளர்களை அழைத்துச் சிறப்பிப்பது. ஆண்டுவிழாவில் மன்ற உறுப்பினர்களின் நாடகம், இன்னிசை, பட்டிமன்றம், மாணவர் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது.
நிதி  
         திங்கள் கூட்டச் செலவினங்களுக்கு மன்ற உறுப்பினர்களின் ஆண்டுச் சந்தா(உரூ 50) வினையும், ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு தன்னார்வ நல்லுள்ளங்கள் அளிக்கும் நன்கொடையினையும் பயன் படுத்திக் கொள்வது.

ஆண்டு தோறும் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு பொதுக்குழுவால் ஒப்புதல் பெறப்படும்.
கல்விப்பணி 
புதுக்கோட்டை நகர புறநகரப் பகுதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே க்ற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அப்பள்ளிகளில் ஆண்டுத்தேர்வில் வகுப்புவாரியாக முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை ,கல்வித்துறை பரிந்துரையோடு ஆண்டுவிழா மேடையேற்றி, பொதுமக்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கிப் பாராட்டத் தொடங்கினோம்.அப்பணிக்கு மாணவர்களிடேயும் பொதுமக்களிடையேயும் இருந்த வரவேற்பு, பரிசு வழங்கும் திட்டத்தினை புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளிகள் அனைத்திற்கும் 1972முதல் விரிவு படுத்தினோம்.
 அதனைத் தொடர்ந்து 1975 முதல் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.

1978முதல் புதுக்கோட்டை அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் ஓரியண்டல் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டத்தினை விரிவு படுத்தியோடு,  பத்தாம் வகுப்பு, மேல்நிலை அரசுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கி, பாராட்டுச் சான்றுகள் வழங்கிப் பெருமைப் படுத்தியுள்ளோம்.
2002 முதல் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா அவர்களின் துணைவியார் நினைவாக மரகதவள்ளி அறக்கட்டளையும் மணிமன்றத்தோடு இணைந்து இவ்விருது வழங்கும் விழாவினைச் சிறப்பாக நடத்தி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் இம்மன்ற முதல் மாணவர் விருதுகளைப் பெற்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக.வழக்குரைஞர்களாக, பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.

 46 ஆண்டுவிழாக்களை வெற்றிகரமாகக் கடந்த இவ்வமைப்பின் 47 ஆவது ஆண்டுவிழா வருகின்ற 2011சூலை இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது.  தொடரும் சமூகப்பணிகள்.......








1 கருத்து:

  1. வாழ்த்துகள் சார். இதைப் படித்ததும் விடிய விடிய நாடகம் பார்த்த எனது தொலைந்த பால்யம் நினைவில் மீள்கிறது.

    எம்.எம்.அப்துல்லா,
    24,ரயில்வேஸ்டேசன் ரோடு,பிச்சத்தான்பட்டி.

    பதிலளிநீக்கு